வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,தாழ்வு மணடலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமானையொட்டியுள்ள வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த வளிமண்டலம் நாளை புயலாக மாறும் என்றும், இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை மறுநாள் வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசா – மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.