யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ வைரலான நிலையில், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அவரே கத்திரிக்கோலால் துண்டித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டதாக தகவல் வெளியாகின. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோவன்,
விசாரணை மூலம் சேகரித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்கத்திற்கு சமர்பிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.