மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து நேரிட்டதால் பதற்றம் நிலவியது.
அங்குள்ள மண்டாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற வெல்டிங் பணியால் தீ விபத்து நேரிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.