பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம்!
Jan 18, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சாலைகள் முழுவதும் குவிந்து கிடக்கும் பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சென்னையில் காலையும், மாலையில் அதிகளவில் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடினர். பண்டிகை முடிந்த நிலையில், சாலைகளில் பட்டாசு கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பட்டாசு கழிவுகள் தேங்கியுள்ளன.

மதுரையில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில், சாலை முழுவதும் குப்பைகள் நிறைந்து காட்சியளித்தன. இரவில் பெய்த மழை காரணமாக மழைநீரோடு பட்டாசு குப்பைகள் கலந்ததால் அவற்றை அகற்றுவதில் தூய்மை பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். உணவு பொருட்களும் ஆங்காங்கே சாலையில் வீசப்பட்டுள்ளால் மழைநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளதால் விழாக்காலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்கள் வெடித்த பட்டாசு கழிவுகள், வியாபாரிகளால் போடப்பட்ட குப்பைகள் என சுமார் 100 டன் அளவிலான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட 4 வீதிகளிலும் அதிகப்படியான குப்பைகள் குவிந்து காட்சியளிக்கின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags: DiwaliSanitation workers are busy clearing firecracker waste
ShareTweetSendShare
Previous Post

இளம் ஆன்மீக தலைவருக்கு பிஷ்னோய் கொலை மிரட்டல் – யார் இந்த அபினவ் அரோரா ? சிறப்பு கட்டுரை!

Next Post

கடை வீதிகளில் மக்கள் கூட்டம்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies