நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!
Jul 17, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா நகர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ். கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவரும் நவாஸுக்கு நாசியா எனும் மனைவியும், 6 வயதில் மகன் ஒருவரும் உள்ளனர். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 15 மாதங்களாகவே தங்கியிருந்து வீட்டுவேலை செய்து வந்த நிலையில், தீபாவளி அன்று அந்த சிறுமி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி சரியாக வீட்டுவேலை செய்யவில்லை எனக்கூறி நவாசும், நசியாவும் மாறி மாறி தாக்கியதாகவும், அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டுகளை வைத்து சூடு வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த சிறுமி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தங்களது 6 வயது மகனுடன் பாசமாக பழகியதை பார்த்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அவரை தொடர்ந்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தங்களின் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் மூலமாக தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி அன்று கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த நிலையில், அந்த கொலையை மறைக்கவே சிறுமியின் உடலை குளியறையில் வைத்துவிட்டு, குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நடத்திய நாடகமும் தற்போது அம்பலமாகியுள்ளது.ஒரு நாள் முழுவதும் உடலை அப்புறப்படுத்த முயன்றும் முடியாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருப்ப்பதும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நண்பர்களான லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, மகேஸ்வரி, சீமா பேகம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலையான தகவல் அறிந்ததும் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த சிறுமியின் தாய், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் மகளின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலே அடக்கம் செய்யுமாறு கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டார். தாயின் வேண்டுகோளை ஏற்று அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் சிறுமியின் உடல் போலீசார் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பெனாசீர் பாத்திமா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் கணவரை இழந்த பெண் ஒருவர் வறுமையின் காரணமாக தன் மகளை வேலைக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவரையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Tags: Chennainewstoday newsHeartbreaking little girl killed! : Arrested 6 people who brutally tortured and killed!CHENNAI CRIME NEWS
ShareTweetSendShare
Previous Post

அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பாெதுமக்கள் கைது!

Next Post

அமரனுக்கு தேசிய விருது – தலைவர்கள் விருப்பம்!

Related News

திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை!

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் : அமித்ஷா

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies