நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெஞ்சை பதற வைத்த சிறுமி கொலை! : கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற 6 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 07:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா நகர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ். கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவரும் நவாஸுக்கு நாசியா எனும் மனைவியும், 6 வயதில் மகன் ஒருவரும் உள்ளனர். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 15 மாதங்களாகவே தங்கியிருந்து வீட்டுவேலை செய்து வந்த நிலையில், தீபாவளி அன்று அந்த சிறுமி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி சரியாக வீட்டுவேலை செய்யவில்லை எனக்கூறி நவாசும், நசியாவும் மாறி மாறி தாக்கியதாகவும், அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டுகளை வைத்து சூடு வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த சிறுமி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தங்களது 6 வயது மகனுடன் பாசமாக பழகியதை பார்த்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அவரை தொடர்ந்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தங்களின் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் மூலமாக தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி அன்று கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த நிலையில், அந்த கொலையை மறைக்கவே சிறுமியின் உடலை குளியறையில் வைத்துவிட்டு, குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நடத்திய நாடகமும் தற்போது அம்பலமாகியுள்ளது.ஒரு நாள் முழுவதும் உடலை அப்புறப்படுத்த முயன்றும் முடியாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருப்ப்பதும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நண்பர்களான லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, மகேஸ்வரி, சீமா பேகம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலையான தகவல் அறிந்ததும் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த சிறுமியின் தாய், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் மகளின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலே அடக்கம் செய்யுமாறு கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டார். தாயின் வேண்டுகோளை ஏற்று அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் சிறுமியின் உடல் போலீசார் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பெனாசீர் பாத்திமா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் கணவரை இழந்த பெண் ஒருவர் வறுமையின் காரணமாக தன் மகளை வேலைக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவரையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Tags: Chennainewstoday newsHeartbreaking little girl killed! : Arrested 6 people who brutally tortured and killed!CHENNAI CRIME NEWS
Share
Tweet
SendShare
Previous Post

அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பாெதுமக்கள் கைது!

Next Post

அமரனுக்கு தேசிய விருது – தலைவர்கள் விருப்பம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies