வீட்டு வாடகை விர்ர்..! : ரூ.30,000 TO ரூ.53,000 ஆக உயர்வு அதிர்ச்சியில் பெங்களூரு மக்கள்!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வீட்டு வாடகை விர்ர்..! : ரூ.30,000 TO ரூ.53,000 ஆக உயர்வு அதிர்ச்சியில் பெங்களூரு மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 03:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, பெங்களூரு, நொய்டா போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரானா காலகட்டத்தில் காலியாக இருந்த வீடுகளின் வாடகை திடீரென உயர்ந்திருப்பதன் காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழகம் உட்பட நாடுமுழுவதும் கொரனாவின் நோய்த்தொற்று தாக்கம் உச்சத்தை தொட்டிருந்த நிலையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியிருந்தன. பல்வேறு ஊர்களிலிருந்து பெருநகரங்களுக்கு வந்திருந்த தொழிலாளர்கள் பலர் அதனை பயன்படுத்தி சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். அதன் காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான வாடகை வீடுகள் காலியாக காணப்பட்டன.

கொரானா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் அலுவலகத்திற்கே வந்து பணிபுரியுமாறு தொழிலாளர்களை தொழில் நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கின. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகர்ப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர். கொரானா தொற்று காலத்தில் காலியாக இருந்த வீடுகள் மீண்டும் நிரம்பத் தொடங்கின. காலப்போக்கில் வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட அதன் வாடகைத் தொகையையும் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதிலும் சென்னை, பெங்களூர், நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் மெட்ரோ நகரங்களில் வீட்டு வாடகை யாரும் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக பெங்களூரில் 77 சதவிகிதம் வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது 30 ஆயிரம் ரூபாயாக இருந்த வீட்டு வாடகை தற்போது 53 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக வாடகைக்கு குடியிருக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிகின்றனர்.

இதே போல நொய்டாவில் பெண் ஒருவர் எதிர்கொண்ட பிரச்னை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாடகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாகவே வாடகையை உயர்த்தியதோடு, வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் உயர்த்தப்பட்ட வாடகையை கேட்டு மிரட்டுவதாகவும் வீட்டு உரிமையாளர் மீது புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வேலைக்காக சென்னையை நாடிவந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வாடகை வீடுகளில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவ்வாறு வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் பலருக்கு இந்த வீட்டு வாடகை உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதிலும் வேலை தேடி பெருநகரங்களை நாடி வரும் இளைஞர்களுக்கு வீட்டு வாடகை உயர்வு அவர்களின் வேலைவாய்ப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் புதிதாக வருவோரிடம் அதிக வாடகை வசூலிக்கலாம் என எண்ணி ஏற்கனவே குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியிலும் வீட்டு உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். பெரும்பாலான நகரங்களில் இரண்டு வருடமாக உயர்த்தப்படாமல் இருந்த வீட்டு வாடகை தற்போது திடீரென 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. வேலைக்காக நகரங்களுக்கு வந்து வேலைபார்ப்போருக்கு வீட்டு வாடகை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளது.

Tags: Home rent Virr..! : Rs. 30000 to Rs. 53000 increase in shockBengaluru people!
Share
Tweet
SendShare
Previous Post

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் கைது!

Next Post

விபத்தில் காயமடைந்த இளைஞர்களுக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies