மழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!
Aug 17, 2025, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழையின் போது பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதராஜபுரம், எருமையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரதராஜபுரம், எருமையூர் குடியிருப்பாளர்கள் சங்கத்தினர், வெள்ள பாதிப்புகளில் இருந்து தங்களுக்கு நிரந்திர தீர்வை ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் பகுதியில் சரியான முறையில் மழைநீர் கால்வாய்களை உருவாக்கி, அடையாறு ஆற்றுக்குள் பாதுகாப்பாக தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை கரையை கடக்கவுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு செல்லும் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வாகனங்களை நிறுத்த முடியாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம், எருமையூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: chennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerVaradarajapuramYerumaiyurYerumaiyur Residents Associationtamilnadu rainheavy rain
ShareTweetSendShare
Previous Post

சென்னை அம்பத்தூர் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி – ஒருவர் கைது!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies