அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Aug 15, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 29, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.

உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையின் தரத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் வழங்குதல், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத் தொகை, சந்தை தொடர்பான நவீன கருவிகளையும் பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

காலணி செய்பவர், குயவர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், கொத்தனார், சலவைத் தொழிலாளர்கள் என 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவோருக்கு 5 முதல் 7 நாட்களுக்கு அடிப்படைத் திறன் பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக மேம்பாட்டுத் திறன் பயிற்சி பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெறும் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகையாகவும், பயிற்சியை நிறைவு செய்தபின் எந்தவித உத்தரவாதமுமின்றி மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பயிற்சியை நிறைவு செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

மேலும் ஒரு மாதத்திற்கு 100 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற வீதத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் எளிதாக சந்தையை அடைவதற்கும், அதனை பொதுமக்களிடையே பிரபலமாக்கி விளம்பரப்படுத்தவும் மத்திய அரசே உதவி செய்கிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற இதுவரை நாடு முழுவதிலுமிருந்து இரண்டு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags: Vishwakarma schemechief minister mk stalinartisansPM Moditamil nadu government
ShareTweetSendShare
Previous Post

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

Next Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies