அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.

உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையின் தரத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் வழங்குதல், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத் தொகை, சந்தை தொடர்பான நவீன கருவிகளையும் பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

காலணி செய்பவர், குயவர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், கொத்தனார், சலவைத் தொழிலாளர்கள் என 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவோருக்கு 5 முதல் 7 நாட்களுக்கு அடிப்படைத் திறன் பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக மேம்பாட்டுத் திறன் பயிற்சி பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெறும் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகையாகவும், பயிற்சியை நிறைவு செய்தபின் எந்தவித உத்தரவாதமுமின்றி மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பயிற்சியை நிறைவு செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

மேலும் ஒரு மாதத்திற்கு 100 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற வீதத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் எளிதாக சந்தையை அடைவதற்கும், அதனை பொதுமக்களிடையே பிரபலமாக்கி விளம்பரப்படுத்தவும் மத்திய அரசே உதவி செய்கிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற இதுவரை நாடு முழுவதிலுமிருந்து இரண்டு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags: chief minister mk stalinartisansPM Moditamil nadu governmentVishwakarma scheme
ShareTweetSendShare
Previous Post

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

Next Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies