அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.

உடல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையின் தரத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக இத்திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் வழங்குதல், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ஊக்கத் தொகை, சந்தை தொடர்பான நவீன கருவிகளையும் பெற இந்த திட்டம் வழிவகுக்கிறது.

காலணி செய்பவர், குயவர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், கொத்தனார், சலவைத் தொழிலாளர்கள் என 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவோருக்கு 5 முதல் 7 நாட்களுக்கு அடிப்படைத் திறன் பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக மேம்பாட்டுத் திறன் பயிற்சி பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெறும் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகையாகவும், பயிற்சியை நிறைவு செய்தபின் எந்தவித உத்தரவாதமுமின்றி மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

பயிற்சியை நிறைவு செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுவதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

மேலும் ஒரு மாதத்திற்கு 100 டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற வீதத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கைவினை கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் எளிதாக சந்தையை அடைவதற்கும், அதனை பொதுமக்களிடையே பிரபலமாக்கி விளம்பரப்படுத்தவும் மத்திய அரசே உதவி செய்கிறது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற இதுவரை நாடு முழுவதிலுமிருந்து இரண்டு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags: chief minister mk stalinartisansPM Moditamil nadu governmentVishwakarma scheme
Share
Tweet
SendShare
Previous Post

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

Next Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை – அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies