சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!
Apr 26, 2026, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு – வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.  உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கீழமாசி வீதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன.

திருச்சியிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சொத்து வரி உயர்வு, வாடகை கடைகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை  திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தால் பிரதான கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திண்டுக்கல்லில் 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி அனைத்து இரும்பு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் உள்ள 250க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர்.

விருதுநகரில் வியாபார தொழில்துறை சங்கம் மற்றும் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.  இதையொட்டி மெயின் பஜார் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோட்டிலும் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பை சேர்ந்த 75 சங்கங்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.

பரமத்தி வேலூர் பேருந்து நிலையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.

Tags: Tamil NaduShops shut downproperty tax hikeeb bill hiketrichy shutdown
ShareTweetSendShare
Previous Post

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் : கரு.நாகராஜன் தகவல்!

Next Post

வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Related News

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

Load More

அண்மைச் செய்திகள்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies