தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!
Oct 27, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம், புதுச்சேரியில்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதிப்புகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது. நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ. செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதனால், திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பயிர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மழையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்படாததால், சில இடங்களில் உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை – வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு உழவர்களுக்கும், பொதுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கும் உரிய இழப்பீடுகளை வழங்க தமிழக அரசு வழங்க வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 47 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதைத் தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும். மழை மற்றும் புயல் காற்றால் விழுந்துள்ள தென்னை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: ramadosslow pressurerain warningmetrological centerfengaltamandu rainheavy rainpuduchery floodchennai floodramadoss statementchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை – சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்!

Next Post

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

கனிமொழி முன்னிலையில் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகி!

காலாட் படை தினம் – தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை!

பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்!

அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை சோதித்த ரஷ்யா!

உத்தரப்பிரதேசம் : மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டயர் தடுப்பான்கள் – வீடியோ வைரல்!

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

Load More

அண்மைச் செய்திகள்

நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த் – தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை!

ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான சேவை நவ.9-ல் தொடக்கம்!

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!

திரையரங்கிற்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி!

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!

இங்கிலாந்து : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!

டெல்லி : நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிய பெண்கள்!

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies