டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!
Oct 9, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப் பேரவை கூடியதும் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது பேசிய பாஜக சட்டப் பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அன்றைக்கே எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்றும், பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

இதேபோல டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் மத்திய அரசு கட்டாயமாக கைவிட வேண்டும் என பாமக சட்டப் பேரவைக் குழு தலைவர் தலைவர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் தமிழக அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்வதாகவும், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம் என கூறிய அவர், ஒருவேளை திட்டம் அமையும் சூழல் வந்தால், முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.

காரசார விவாதத்துக்குப் பின்னர், சட்டப் பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

Tags: tn assemblyTungsten mining issue: The legal debate in the Legislative Assembly!
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தக கண்காட்சி டிச.27-ம் தேதி தொடக்கம்! – பபாசி

Next Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டம்!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies