டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!
Jan 18, 2026, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப் பேரவை கூடியதும் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது பேசிய பாஜக சட்டப் பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அன்றைக்கே எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்றும், பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

இதேபோல டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் மத்திய அரசு கட்டாயமாக கைவிட வேண்டும் என பாமக சட்டப் பேரவைக் குழு தலைவர் தலைவர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் தமிழக அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்வதாகவும், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம் என கூறிய அவர், ஒருவேளை திட்டம் அமையும் சூழல் வந்தால், முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.

காரசார விவாதத்துக்குப் பின்னர், சட்டப் பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

Tags: tn assemblyTungsten mining issue: The legal debate in the Legislative Assembly!
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தக கண்காட்சி டிச.27-ம் தேதி தொடக்கம்! – பபாசி

Next Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies