ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!
Jul 10, 2025, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!

Web Desk by Web Desk
Dec 30, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில், பொதுமக்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘மகிளா சம்மன் யோஜனா’ என்ற திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கினாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுமென ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

அதேபோல், டெல்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, அரவிந்த் கெஜ்ரிவாலும், டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அண்மையில் நடத்தினர். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தகவல்களை தந்து ஏமாற வேண்டாமென டெல்லியின் மகளிர் மேம்பாட்டுத்துறையும், சுகாதாரத்துறையும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தலையொட்டி பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டு வரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை பஞ்சாப் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyCongress complains to the lieutenant governor about Aam Aadmi!
ShareTweetSendShare
Previous Post

வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

மேற்குவங்கம் : கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல்!

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி இருவர் உயிரிழப்பு!

நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies