திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? - சிறப்பு கட்டுரை!
Feb 15, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்தபின்பு முதல் மூன்றாண்டு ஆண்டுகள் அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது கண்டித்து அறிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளன. திமுக அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.

திமுகவின் தயவாலும், பண உதவியாலும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டும் காணாதது போல கடந்த சென்ற கூட்டணிக் கட்சிகள் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் திமுக அரசை விமர்சிக்கவும், கண்டிக்கவும் தொடங்கியுள்ளன.

அண்மையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி திமுகவுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தற்போது ஆதவ் அர்ஜுனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அடுத்து வரும் தேர்தலில் அதிகளவிலான இடங்களை கேட்டுப்பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

தமிழக அரசியல் களம் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் சுற்றிவருவதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தற்போது மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வகையில் திமுக அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகள் வெளிப்படையாகவே கண்டிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரம் செய்வது, போராட்டம் நடத்துவது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் எனவும் ஆனால் தமிழகத்தில் தெருமுனைக்கூட்டம், ஊர்வலம் என அனைத்திற்குமே அனுமதில் தருவதில் காலதாமதம் செய்வதும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கைது செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளின் உதவியோடு மேம்படுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் திமுகவை கண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கூட்டணியை விட்டு வெளியேறும் முயற்சியா ? அல்லது கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu Vazhuvurimai KatchiManiateya Makkal Katchidmk alliance splitDMKmdmkVKCMarxist
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

மகளிர் உரிமைத் தொகையை திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர் திமுக பிராந்திய அரசுக்கு சரமாரி கேள்வி!

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Load More

அண்மைச் செய்திகள்

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies