சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
Aug 24, 2025, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : “சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

DD Tamilசெய்தியாளர் கெளதம் மற்றும் ஒளிப்பதிவாளர் சுரேந்தர் ஆகியேரை மிக மோசமாகவும், தரக்குறைவாகவும் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் இணை இயக்குநர் மேகவர்மன் மற்றும் செய்தித்தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் ஆகியோர் மீது செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சபாநாயகர் அப்பாவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் முடிவு செய்யத் தொடங்கி விட்டால் ஜனநாயகம் சீரழிந்து விடும். இதுமட்டுமின்றி நேற்று தமிழக சட்டசபை நிகழ்வுகளை ஒலிபரப்புவது, செய்தியாக வெளியிடுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன செய்தியை வெளியிட வேண்டும் என்பதை திமுக அரசு முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே திமுக அரசு பதட்டத்தில் இருப்பதையே உணர்த்துகிறது.

மக்களிடம் எந்த தகவலும் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் பெரும் முனைப்புடன் திமுக அரசும் அவர்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது பெரும் கண்டனத்துக்குரியது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதுபோல தவறுகள், அராஜக செயல்களை எத்தனை நாட்களுக்கு மூடி மறைக்க இயலும். எனவே பிரச்சனைகளை மறைக்க முயலாமல் அதற்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganDMK governmentjournalists insultedl murugan condemnmk stlainChennaisecretariat
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை நலம் விசாரித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

Next Post

நேபாள நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 95-ஆக உயர்வு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies