சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
Jan 24, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : “சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

DD Tamilசெய்தியாளர் கெளதம் மற்றும் ஒளிப்பதிவாளர் சுரேந்தர் ஆகியேரை மிக மோசமாகவும், தரக்குறைவாகவும் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் இணை இயக்குநர் மேகவர்மன் மற்றும் செய்தித்தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் ஆகியோர் மீது செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சபாநாயகர் அப்பாவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் முடிவு செய்யத் தொடங்கி விட்டால் ஜனநாயகம் சீரழிந்து விடும். இதுமட்டுமின்றி நேற்று தமிழக சட்டசபை நிகழ்வுகளை ஒலிபரப்புவது, செய்தியாக வெளியிடுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன செய்தியை வெளியிட வேண்டும் என்பதை திமுக அரசு முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே திமுக அரசு பதட்டத்தில் இருப்பதையே உணர்த்துகிறது.

மக்களிடம் எந்த தகவலும் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் பெரும் முனைப்புடன் திமுக அரசும் அவர்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது பெரும் கண்டனத்துக்குரியது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதுபோல தவறுகள், அராஜக செயல்களை எத்தனை நாட்களுக்கு மூடி மறைக்க இயலும். எனவே பிரச்சனைகளை மறைக்க முயலாமல் அதற்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: journalists insultedl murugan condemnmk stlainChennaisecretariatminister l muruganDMK government
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை நலம் விசாரித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

Next Post

நேபாள நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 95-ஆக உயர்வு!

Related News

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies