ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Mar 19, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே வாரத்தில் வழுக்கையாகும் தலை : மர்ம நோய் காரணமா? பீதியில் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில், புதிய மர்ம நோய் வேகமாகப் பரவி வருகிறது. கிராம மக்களின் தலையில் இருந்து வேக வேகமாக முடி உதிர்ந்து விழுகிறது. முடி விழ ஆரம்பித்து விட்டால், ஒரே வாரத்தில், தலை வழுக்கையாகி விடுகிறது. மக்கள் மத்தியில் இது, அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முடி உதிர்வுக்கு என்ன காரணம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் ஷெகான் தாலுகாவில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராம மக்கள் புதுவிதமான ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதாவது, தலை முடியை லேசாக இழுத்தால் கூட, உடனடியாக முடி கொட்டி விடுகிறது. ஓரே வாரத்துக்குள் மொத்தமாக முடி கொட்டி, தலை வழுக்கை ஆகிறது. என்ன பிரச்னை ? எதனால் முடி கொட்டுகிறது ? என்று மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன், தலை முழுவதும் வழுக்கையாவதால், மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

ஆண் ,பெண் என வித்தியாசமில்லாமல், இளம் வயதினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முடி கொட்டும் பிரச்னை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிராமங்களுக்குச் சென்ற சுகாதாரக் குழு, சுமார் 50 பேர் ஏற்கெனவே, இந்த முடி உதிரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்களும் கவலைத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சைகளும், தோல் பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரைச் சுட வைத்துப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

திடீர் முடி உதிர்தலுக்கான காரணத்தைக் கண்டறிய மாநில சுகாதாரத் துறை விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை உரம் காரணமாக மாசுபட்ட தண்ணீரால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஷேகான் தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் தீபாலி ரஹேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட இந்த மூன்று கிராமங்களில், விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும், முடி மாதிரிகளையும் சோதனை செய்து வருவதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலை வழுக்கையான மக்களில் 99 சதவீதம் பேருக்கு, உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் முடி உதிர்வதாகவும் மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

முடி உதிர்தலுக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த பிரச்சனையைத் தீர்ப்பதில், அரசு சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். பரிசோதனைகள் முடிவுகள் வந்தபின்தான், திடீர் முடி கொட்டுவதற்கான காரணங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மூன்று கிராம மக்களும் யாருக்கு எப்போது முடி உதிருமோ என்ற அச்சத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

Tags: HingnaBuldhanahair fall issueDr. Deepali RahekarMAHARASHTRAhair lossBorgaonKalwat
ShareTweetSendShare
Previous Post

மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை – மனம் திறந்த பிரதமர் மோடி!

Next Post

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies