திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!
Aug 18, 2025, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 08:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அந்தர் பல்டி என்பது இதுதானோ? திமுக சார்பில் நேற்றைய தினம் ஒரு செய்தி ஊடகங்கள் முலமாக வெளியிடப்பட்டது. அதாவது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்று…

ஏற்கனவே தமிழகத்தில் திமுக மற்றும் அவர்களுடைய கூட்டணி கட்சியினர் நடத்தி வரும் மும்மொழி கல்வி போதிக்கும் CBSE பள்ளிகளின் பட்டியலை நாம் ஏற்கனவே இரண்டு முறை வெளியிட்டிருந்தோம் அதை மீண்டும் நேற்றைய தினம் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு திமுகவின் மொழி அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தினர்.

மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் மகன் நான் பிரெஞ்ச் மொழி கல்வி கற்கிறேன் என தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வெளியாகி திமுகவின் சாயம் வெளுத்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் உருது மொழிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆதரவு வாக்குறுதி செய்தியை நாம் பதிவு செய்தோம், பலரும் அந்த செய்தியை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து தமிழக மக்களுக்கு திமுகவின் மொழி நாடக அரசியலை நினைவுபடுத்தினர்.

மேலும் சத்தமே இல்லாமல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி கற்பிக்க அந்நாட்டு அரசின் தூதரக பிரதிநிதிகளுடன் கடந்த ஆண்டு சென்னை மாநகர மேயர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செய்தி பத்திரிக்கை ஒன்றில் 28.08.2024 அன்று வெளியாகி இருந்ததையும் வெளியிட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

திமுகவினர் ஹிந்தி மொழிக்கு எதிராகவோ அல்லது மும்மொழி கொள்கைக்கு எதிராகவோ போராடுவதாக இருந்தால் அதை வேளச்சேரி சன்ஷைன் மான்டசோரி பள்ளியில் தொடங்கி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நடத்தி CBSE பள்ளிகள் முன்பு தான் நடத்த வேண்டுமென நாம் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அதன் விளைவாக நேற்று மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் என செய்தி வெளியிட்டிருந்த திமுக திடீரென அந்தர்பல்டி அடித்து… கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் என்று இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.

இதிலிருந்தே திமுகவின் தகிடு தத்தங்களை, பொய் பித்தலாட்டங்களை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை மறுக்கிறது என்கிற திமுகவின் குற்றச்சாட்டு பொய்யானது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

PM SHRI எனப்படும் Pradhan Mantri Schools For Rising India திட்டத்தில் மும்மொழி கல்வி பயிற்றுவிப்பதற்கான மூன்றாவது மொழிக்கான பாடத்திட்டம் உருவாக்குதல், அதற்கான புத்தகங்கள் அச்சிடுதல், அதற்கான ஆசியர்களை நியமித்தல். (அதில் 30℅ பேர் பெண் ஆசிரியர்கள்) அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், பள்ளிகளில் ஆராய்ச்சி மையம் உருவாக்குதல், இணையதள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், விளையாட்டு மையம், சுத்தரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்குதல், ஸ்மார்ட் வகுப்பறைகள் என உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு விஷயங்களுக்காக வழங்கும் நிதியை மேற்குறிப்பிட்ட எந்த விஷயங்களையும் தமிழக அரசு இதுவரை செய்யாத போது அதற்கான நிதியை மட்டும் கோரும் நிலையில் விதிமுறைகளை மீறி எப்படி நிதி வழங்க முடியும் என்று தான் மத்திய அரசு கேள்வி எழுப்புகிறது.

மேலும் PM SHRI திட்டத்தில் தமிழக அரசு சேருவதற்கான இசைவு தெரிவித்து அதற்கான உள்கட்டமைப்பு விஷயங்களை செய்வதற்கு முன்றாவது மற்றும் நான்காவது தவணை நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக அரசின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.ஷிவதாஸ் மீனா IAS அவர்கள் மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் IAS அவர்களுக்கு 15.03.2024 தேதியிட்டு எழுதியுள்ள கடிதம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானதை அனைவரும் பார்த்திருப்போம்.

அப்படி எனில் ஏற்கனவே இரண்டு தவணைகளாக PM SHRI திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு பெற்றது உறுதியாகிறது. மேலும் அந்த நிதியை நேர்மையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்வி வளர்ச்சிக்காக, மாணவர்கள் நலனுக்காக பயன்படுத்தாத காரணத்தாலும் அந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தாத காரணத்தாலும் தான் நிதி மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்களை மட்டுமே பேசி மக்களை ஏமாற்றி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல் கட்சி தானே திமுக என எச். ராஜா விமர்சித்துள்ளார்.

Tags: DMKMK Stalinh rajatn govtIs this what DMK's Antar Baldi is all about? : H. the king
ShareTweetSendShare
Previous Post

ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? : எல். முருகன் கேள்வி!

Next Post

உடைமைகளை பற்றி கவலை வேண்டாம் : பயணிகளிடம் வரவேற்பை பெற்ற “டிஜிட்டல் லாக்கர்” சேவை!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies