உடைமைகளை பற்றி கவலை வேண்டாம் : பயணிகளிடம் வரவேற்பை பெற்ற “டிஜிட்டல் லாக்கர்” சேவை!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடைமைகளை பற்றி கவலை வேண்டாம் : பயணிகளிடம் வரவேற்பை பெற்ற “டிஜிட்டல் லாக்கர்” சேவை!

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 08:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், தமிழகத்தின் மேற்கு, மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, அந்தந்த பகுதிகளில் இருந்தும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பல ரயில்கள் வந்தடைகின்றன.

இந்த ரயில்கள் மூலம் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடமைகளை செல்லும் இடங்களுக்கெல்லாம் தூக்கிச் செல்லும் அவல நிலை இருந்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வுகாணும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையின் நுழைவு வாயிலில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடம் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் லாக்கர் அறையில், நடுத்தர லாக்கர்கள், பெரிய லாக்கர்கள் மற்றும் மிகப்பெரிய லாக்கர்கள் என 3 வகையான லாக்கர் சேவை வழங்கப்படுகிறது.

நடுத்தர வகை லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு 40 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 90 ரூபாயும், ஒரு நாளைக்கு 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய வகை லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 80 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 120 ரூபாயும், ஒரு நாளைக்கு 160 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.

அதேபோல, மிகப்பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 100 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 150 ரூபாயும், ஒரு நாளைக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

டிஜிட்டல் லாக்கர்கள் அனைத்தும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இயக்கக்கூடியது எனவும், QR குறியீட்டை பயணிகள் தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை தேர்வு செய்து UPI மூலம் கட்டண தொகையை செலுத்தி, அதில் அளிக்கப்படும் ரகசிய எண் மூலம் லாக்கர் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்திய நேரத்தை விட அதிக நேரம் டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்தினாலும், அதுபற்றிய தகவல்கள் டிஜிட்டல் லாக்கர் சேவை மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுவதால், கூடுதல் தொகை செலுத்தி உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளதென பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: டிஜிட்டல் லாக்கர்chennai central railway stationCHENNAI NEWSDon't Worry About Belongings : The “Digital Locker” service is popular with travelers!சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!

Next Post

டெல்லியில் RSS புதிய அலுவலகம் : நவீன கலையம்சத்துடன் பிரம்மாண்டமாக வடிவமைப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies