சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி!
Aug 24, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி!

தோல்வியே காணாமல் தொடரை வென்ற இந்திய அணி!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக டேரல் மிச்சல் 63 ரன்களும், மைக்கல் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர், 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 31 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கோலி ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சிஅளித்தார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், அக்சர் பட்டேல் 29 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் இந்திய அணி 49 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து கோப்பையைக் கைப்பற்றியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் கோப்பை வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடிய விராட் கோலி – ரோஹித் சர்மா, ஸ்ட்ம்ப்பை வைத்து தாண்டியா ஆட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக Runner Up பட்டத்தை வென்றது.

Tags: Cricketindia wonThe Indian team won the Champions Trophy!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு இன்று தொடங்குகிறது!

Next Post

தேசியக் கொடியை ஏந்தியபடி இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் !

Related News

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies