ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பெங்களூரு அணி வீரர் படிக்கல் 40 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் வீரர்கள், 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். கேப்டன் கில் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் குஜராத் அணி 5-ம் இடத்தில் நீடிக்கிறது.
















