சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த இருவர், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதனை ஏற்று 4 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.