ஜல்லிக்கட்டு போட்டி : மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு!
Oct 24, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி : மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Mar 16, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் காளை குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளையொட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மார்ச் 1-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆயிரத்து 300 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்த நிலையில், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, காளையை அடக்க முயன்ற கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரரான மகேஷ் பாண்டியை எதிர்பாராத விதமாக காளை முட்டி தள்ளியது. இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், மகேஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: ஜல்லிக்கட்டு போட்டிJallikattu competition: A bullfighter dies!ஜல்லிக்கட்டு
ShareTweetSendShare
Previous Post

கொரோனா வைரஸை உருவாக்கியது சீனா தான் : ஜெர்மனி உளவுத்துறை உறுதி!

Next Post

தேநீர் ஆடையில் முருகப்பெருமான் ஓவியம் வரைந்து அசத்தல்!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies