நீட் நாடகம் போதும் முதல்வரே...மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் - அண்ணாமலை
Jan 29, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் நாடகம் போதும் முதல்வரே…மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் நாடகம் போதும் என்றும்,மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்  என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்  ஸ்டாலின் என அவர் கூறியுள்ளார்.

அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  முன்வைக்க விரும்புகிறேன்.

நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழல் விசாரணைக்கு தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 – 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி  ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 – 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?

நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?

யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு என்றும் அவர் சாடியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா? என்றும் அவர் வினவியுள்ளார்.

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: annamalaiAll party meetingneet examtamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர் : வானதி சீனிவாசன்

Next Post

பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

Related News

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட பதிவுகள் நீக்கம் – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

சென்னை அடையாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 பேர் கைது!

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

மக்கள் குறை தீர்ப்பு பெட்டி சுற்றுப்பயணம் – சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் ஏன்? – புதிய மாற்றத்துக்கான அறிகுறி – சிறப்பு தொகுப்பு!

வலிமையான நண்பரை இழந்துவிட்டேன் – மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேதனை!

சரியும் டாலரின் மதிப்பு, விழி பிதுங்கும் ட்ரம்ப் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அமெரிக்கா : தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்தியா!

அவசர நிலையில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் அஜித் பவார் பயணம் செய்த விமானியிடம் இருந்து வரவில்லை – விமானத்துறை அமைச்சகம் விளக்கம்!

20 மாகாணங்களில் பாதிப்பு : பல பில்லியன் டாலர் இழப்பு : அமெரிக்காவின் பொருளாதாரத்தை பதம் பார்த்த பனிப்புயல்!

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது – ஐக்கிய அரபு அமீரகம் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies