மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழாவில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்தக்காலை நட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை சித்திரைத் திருவிழா வரும் மே 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.