கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது, அவர் மீது தண்ணீரை விசிறியடித்து குளிர்விப்பதற்காகத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தொகுதியில் நடைபெறும் இந்த தொழிலானது தற்போது நலிவடைந்து வரும் நிலையில் அதனை அரசு காப்பாற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

மதுரையில் ஆண்டுதோறும் களைகட்டும் சித்திரைத் திருவிழா தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 12 அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.  நிகழ்ச்சியில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தண்ணீரை விசிறியடிப்பது வழக்கம். அதற்காக ஆட்டுத்தோல் பைகள் தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதிலும் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக  இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் மட்டுமே  இந்த  ஆட்டுத்தோலால் தண்ணீர் விசிறியடிக்கும் பைகள் தயாரிக்கப்பட்டு  வருவதால்   சித்திரைத் திருவிழா தொடங்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்தே விரதம் இருந்து  பைகளைச் செய்வதற்கான பணிகள் தொடங்கிவிடும்.

ஆனால் சில ஆண்டுகளாகத் தண்ணீர் வசதி, இட வசதி உள்ளிட்டவை இல்லாததால் தோல் பதப்படுத்தப்  பயன்படுத்தப்படும் தொட்டிகள் சேதம் அடைந்தும் கருவேலமரங்கள்  சூழ்ந்தும் காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தை நாட வேண்டிய நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு ஆட்டுத் தோலை ரூபாய் 150க்கு வாங்கி பதப்படுத்துவதற்கு மட்டுமே 200 முதல் 250 ரூபாய் செலவழிப்பதாகவும் இதனால் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தங்கள் பகுதியிலேயே பதப்படுத்துவதற்கு முறையான தண்ணீர் வசதி, தொட்டி வசதி செய்து தந்தால் ஆட்டுத் தோலைப் பதப்படுத்துவதற்கு 50 ரூபாய் மட்டுமே ஆகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் தொகுதியில் வரும் காரியாபட்டியில் நடைபெறும் ஆட்டுத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் நசிந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் சிறக்க மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் விற்பனை ஆகாத தோல் பைகளைச் சேமிக்க குடோன் வசதிகளைச் செய்து தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கும் தொழிலாளர்கள், வேறு தொழில்கள் இருந்தாலும் கள்ளழகர் மீது கொண்ட பற்றுதலாலும் வேண்டுதலாலும் ஆட்டுத் தோல் பைகள் தயாரிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

கள்ளழகர் திருவிழாவுக்காகக் காலம் தோறும் தோல் பைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தற்போது தொழில் நலிவடைந்துள்ளதால் வேதனையடைந்துள்ளனர். வரும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டேனும் தங்கள் துயர் துடைக்க அரசு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: மதுரை கள்ளழகர்tamil janam tvசித்திரைத் திருவிழாWill tears be wiped away during the Kallazhagar festival?: Leather bag workers' requestதோல் பை தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய தடை : மத்திய அரசு

Next Post

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies