பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஜப்பான்தான் முதலில் கண்டித்ததாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிடம் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையில் 9 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவினர் முதல்கட்டமாக ஜப்பான் புறப்பட்டனர்.
டோக்கியோ சென்றடைந்த அவர்களுக்கு இந்தியத் தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.