பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி பேரணி
நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவம், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலக நாடுகள் ஒன்று கூட குறை சொல்லவில்லை என தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சிலர் சந்தேகப்பார்வையுடன் செயல்படுவதாகவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.