திருவள்ளூர் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இதில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் லோகநாதன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது 6 வயது மகளுடன் வெளியில் சென்ற லோகநாதன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் தேடிவந்தனர். அப்போது புட்லூர் ரயில் நிலையம் அருகே லோகநாதன் மற்றும் அவரது மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இருவரின் உடலையும் மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.