பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா நாட்டிற்குச் சென்றது. ஜார்ஜ் டவுனில் கயானா நாடாளுமன்ற சபாநாயகர் Manzoor Nadiருடன் சந்தித்த அனைத்துக் கட்சி குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியாவில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகப் பிரிவினையை உண்டாக்கப் பாகிஸ்தான் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு துயரமான தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறிய சசிதரூர், கடந்த 2008இல் மும்பை நடந்த மும்பை தாக்குதலில் 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.