நடிகை பிரீத்தி ஜிந்தா வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக, கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை அவர் வழங்கியுள்ளார்.
சவுத் வெஸ்டர்ன் கமெண்டின் கீழ் செயல்படும் ராணுவ மகளிர் நலச் சங்கத்திற்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.