S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!
Aug 24, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில்  S-400  மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியுள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கிடையே  பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களையும் முகாம்களையும் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில்  துல்லியமான தாக்குதல்களை இந்தியா நடத்தியது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றியது.

அதனையடுத்து, பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும், நடுவானிலேயே இந்தியா முறியடித்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியாமல் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.  இந்த பெருமை, S-400 வான் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தது என்று உலக அளவில் பாராட்டப் பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஆப்ரேஷன் சிந்தூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும்  பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், T-90 டாங்கிகள் மற்றும் Su-30 MKI போர் விமானங்களின் உரிமம் பெற்ற உற்பத்தி, MiG-29 மற்றும் Kamov ஹெலிகாப்டர்களின் விநியோகம், INS விக்ரமாதித்யா பரிமாற்றம், இந்தியாவில் AK-203 துப்பாக்கிகளின் கூட்டு உற்பத்தி மற்றும் BrahMos ஏவுகணைகளின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு திட்டங்களில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் BrahMos ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடலின் உற்பத்திக்கு ரஷ்யா தனது விரிவான தொழில்நுட்பத் திறனை  இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில், புதிய மேம்பட்ட அதிநவீன BrahMos ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,2018 ஆம் ஆண்டு ‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் S-400  வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இது தொடர்பான இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2019-க்குப் பிறகு,   S-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியது.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையான S-400  நகரும் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.  சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் மற்றும் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

Tags: ரஷ்ய துாதர் பாராட்டுபிரம்மோஸ் சூப்பர்S-400 வான் பாதுகாப்புS-400Brahmos Super: Russian Ambassador praises Indian Army
ShareTweetSendShare
Previous Post

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Next Post

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies