அசாம் மாநிலம், கவுகாத்தியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், அசாமின் கவுகாத்தியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.