தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய நயினார் நாகேந்திரன்,வழக்குகளில் காவல்துறை முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு வரும் 8 ஆம் தேதி மதுரையில் பதில் வழங்கப்படும் என்றும் விவசாயி தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் நடத்த வேண்டும் என்றும் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.