மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு அனுமதி கோரி மாநகர காவல்துறையிடம் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அதில், அறுபடை வீடு மாதிரி வடிவங்களில் காலை, மாலை நேரங்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் 200 பக்தர்கள் பங்கேற்க அனுமதி கேட்கப்பட்டது.
பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் பூஜை நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், தனியார் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டியுள்ளது.