பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய அவர், நக்சலைட்கள் இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக தெரிவித்தார். வடகிழக்கு மக்கள் தற்போது அகிம்சை வழியில் வருவதாகவும், பா.ஜ. ஆட்சி ஆரம்பிக்கும் போது, 32 இடங்கள் நக்சலால் பாதிக்கப்பட்டிருந்தது என்றும், தற்போது ஒரு பகுதியில் உள்ள நக்சலை அழிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் திட்டங்கள் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டி தமிழகத்தில் அரசியல் செய்வதாகவும், தமிழகம் முழுவதும் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் கூறினார்.
மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வை தோற்கடிக்கவே அமித்ஷா மதுரை வந்துள்ளதாகவும், 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், வறுமையை வைத்து மட்டுமே அரசியல் செய்ததாக தெரிவித்தார்.
2026 ஒற்றை இலக்கு தி.மு.க., வீட்டிற்கு அனுப்பி பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என்றும் அண்ணாமலை கூறினார்.