திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jun 11, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நாடு போற்றும் நல்லாட்சி” என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, நம் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் கல்வித்துறையை சீரமைப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை. பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இது போதாதென்று, 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை. வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரச்சாரம் உயர்க்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது.

ஒரு காலத்தில் ஆன்றோர்களால் “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, “கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக” திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது. ‘அப்பா’, ‘பல்கலை வேந்தர்’ என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும். பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன் கேள்விIs advertising important under DMK rulebut education ignored?: Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்

Next Post

தாம்பரத்தில் பாலியல் அத்துமீறல் நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு : காவல்துறை

Related News

கோவை கொடிசியா அரங்கில் ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை!

மதுரை : சாப்பிட்டுக் கொண்டே ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

சென்னை : போதை ஊசி பயன்படுத்திய பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு!

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் கார் மோதி உயிரிழப்பு!

முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறக்க தகுதியற்றவர் : சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

அலறும் சீனா, பாகிஸ்தான் : Su-57E போர் விமானம் உற்பத்தி – ரஷ்யாவுடன் இந்தியா கைகோர்ப்பு!

மெக்சிகோ : 4 மீட்டர் உயரம் எழுந்த ராட்சத பேரலை!

கிருஷ்ணகிரி : மதுபான பாட்டில்களை மாணவர்களே அப்புறப்படுத்தும் அவலம்!

புரோ ஹாக்கி லீக் : இந்திய அணி 2-வது தோல்வி!

திருவண்ணாமலை : ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஆக்கிரமிப்பு அகற்றம் : பாம்பு, தேள்களுடன் வாழ்க்கை – அகதிகளான மக்கள்!

“அப்பாச்சி RTR 200 4V” பைக்கை அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ்!

திருப்பூர் : ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்குள் தனியாங்கி கதவுகள் கொண்ட புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் : ஐசிஎஃப்

மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies