விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியாவின் பிரபல ஆளுமைகள் பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.
கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், ஆய்வுக்காக ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தௌலத் சிங், லெப்டினன்ட் ஜென்ரல் பிக்ரம் சிங், ஏர் வைஸ் மார்ஷல் பிண்டோ உட்பட 6 இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
கடந்த 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, ஸ்விஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மௌண்ட் பிளாங்கில் ஏர் இந்தியா 101 விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முன்னோடி அணு இயற்பியலாளர் ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.
கடந்த 1973-ம் ஆண்டு மே 31-ம் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் 440 விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சுரேந்திர மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.
கடந்த 1980-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கோர விபத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனுமான சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மோசமான வானிலை காரணமாகத் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் ரயில்வே அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தார்.
கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் 206 ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், மக்களவையின் 12வது சபாநாயகரான ஜி.எம்.சி.பாலயோகி மரணமடைந்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு, தனது சகோதரருடன் பயணம் மேற்கொண்ட தென்னிந்திய நடிகை சௌந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஹரியானா முன்னாள் மின்துறை அமைச்சர் ஓ.பி.ஜிண்டால் மற்றும் முன்னாள் வேளாண் அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் பலியாகினர்.
கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நல்லமலா வனப்பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு மரணமடைந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
2025 ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.