நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் - அச்சத்தில் மக்கள்!
Jun 17, 2025, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாதாரண மழைக்கே தேங்கியிருக்கும் மழைநீரும், குண்டும் குழியுமான சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலை அமைந்திருக்கும் பகுதி சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான சூளைமேடு பகுதி தான். சூளைமேடு மட்டுமல்ல, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், பெரியார் பாதை என அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி என மாதம் ஒரு குழி தோண்டப்படுவதும், பணிகள் முடிந்தும் அக்குழிகள் மூடப்படாமல் இருப்பதுமே அடிக்கடி விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மழையின் போது சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பாகவும் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலைகளில் இருபுறமும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போதுவரை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்கு ஒரு பள்ளத்தை மூடினால் அதற்குள் அடுத்த பள்ளத்தைத் தோண்டி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலையாகப் பெரியார் பாதை சாலை மாறியிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரத்திற்கு நீடிக்கிறது. குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்து இனியாவது முறையான மாற்று ஏற்பாடுகளோடு சென்னை மாநகராட்சி பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: CHENNAI NEWSchennai news todayCity? Hell? : Potholes that claim lives - People in fearஉயிர்பலி வாங்கும் பள்ளங்கள்நகரமா? நரகமா?
ShareTweetSendShare
Previous Post

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

Next Post

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies