அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த கேரள செவிலியரை தரக்குறைவாக விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமார் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ரஞ்சிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வெள்ளரிக்குண்டு தாலுகா அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த பவித்ரன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ரஞ்சிதாவின் சாதியைக் குறிப்பிட்டு அவரை அவதூறாக விமர்சித்திருந்தார். இந்த பதிவு வைரலானதையடுத்து பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.