இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரித்து வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக வலைத்தளத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்தது. அதில், இந்தியாவின் எல்லைகள் தவறாகக் காட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த தவறான வரைபட பதிவு இந்தியப் பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைத் தூண்டியது.
கண்டனங்கள் வலுத்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நேரடியாகப் பதிலளித்து இந்தியாவிடம் பொது மன்னிப்பைக் கோரியது.
அதில் இந்த வரைபட பதிவு ஒரு பிராந்தியத்தை விளக்கும் படமாக மட்டுமே வெளியிடப்பட்டது எனவும், இருப்பினும் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தவறான வரைபடத்தால் ஏற்பட்ட வருத்தத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் இஸ்ரேல் ராணுவப்படை தெரிவித்துள்ளது.