தமிழகம் முழுவதும் நடைபெறும் குரூப் 1/1ஏ முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1/1ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுக்காக்கள் என மொத்தம் 44 இடங்களில் நடைபெற்று வரும் இந்த தேர்வில் 2 லட்சத்து 49 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்றனர். குறிப்பாக குரூப் 1 தேர்வை 2 லட்சத்து 27 ஆயிரம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6 ஆயிரத்து 465 பேரும் எழுதுகின்றனர்.
சென்னையில் 170 மையங்களில் குரூப் 1/1ஏ தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 41 ஆயிரத்து 94 தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர்.