கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 22 அடி உயர பனைமரத்தில் ஏறி கள் இறக்கி தொண்டர்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி பனைமரம் ஏறிக் கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்குள்ள பனைமரத்தில் ஏறிக் கள் இறக்கினார். இடுப்பில் குடுவையை அணிந்துகொண்டு சுமார் 22 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறிய சீமான் கள் இறக்கி அதனைத் தொண்டர்களுக்குப் பனை ஓலையில் செய்யப்பட்ட பட்டையில் ஊற்றிக்கொடுத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட கள் குடித்து வரவேற்பு தெரிவித்தனர்.