தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், குண்டர் சட்டம் போட்டது உட்பட கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போராடி வரும் கரும்பு விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? எனக் கூறியுள்ள அண்ணாமலை, 4 ஆண்டுகளில் முதலமைச்சர் போட்ட வேடங்களில் தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேடம் பல்லிளிக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.