திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம சாலைகள் வழியாக பெட்ரோலியம் எண்ணெய் குழாய் பறிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“100% நிதி பங்களிப்பை மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பேசுவதில்லை என்றும், கள் இறக்கும் போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தவெக-வும், பாஜக-வும் மாறுபட்ட நிலைபாடும், கொள்கையும் கொண்டவர்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
தந்தை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர் அன்புமணி; கூட்டணி பிரச்னை என்பது வெறும் கட்டுக்கதை என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பேச திமுக-விற்கு அருகதை இல்லை என்றும், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.