இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல் 5-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் அதிகரித்து வருகிறது. போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 இந்தியர்கள் ஆர்மீனியா எல்லையை வந்தடைந்தனர். தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே ஈரானின் தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த மின் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டதாக ஹைபாவை தளமாக கொண்ட பசான் குழுமம் தெரிவித்துள்ளது.