எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே கரும்பு விவசாயிகள்  930 நாட்களைக் கடந்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த தீவிரப்போராட்டத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்,  திருஆரூரான் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து போலீசார் அந்த விவசாயிகளைக் கைது செய்தனர்.

திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 212  கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டது. விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க தனியார்  சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  சுமார் 2000 கோடி மதிப்புள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அது தொடர்புடைய சொத்துக்களை கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வெறும் 147 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.  ஆனால்  அதன்பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது.

இதற்கிடையே கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் வாங்காத கடனுக்கு விவசாயிகள் சிவில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தங்கள் பெயரில் வாங்கிய கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் வட்டியுடன் செலுத்துமாறும் வலியுறுத்தி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி  பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கரும்பு விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து தமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: When will life be sweet? : Sugarcane farmers are waiting with bitterness!கரும்பு விவசாயிகள்கசப்புடன் காத்திருக்கும் விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Next Post

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies