வாழத் தகுதியற்றதா வடசென்னை?
Jun 20, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

Web Desk by Web Desk
Jun 20, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எண்ணூர் கோத்தாரி உரத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களால் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட அமோனியா கசிவு பாதிப்பிலிருந்தே மீண்டு வராத நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நச்சு பாதிப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வடசென்னையின் எண்ணூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் பெருந்தொழிற்சாலைகளின் மையமாகத் திகழ்கின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், காற்றில் பரவும் விச நச்சுக்கள் என அப்பகுதி மக்கள் உயிர்வாழவே ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோத்தாரி உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்கள் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளன.

எண்ணூர் அருகே அமைந்திருக்கும் சத்தியவாணி முத்துநகர், தாழங்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்திருக்கும் நச்சுத் துகள்களால் அப்பகுதி மக்கள் தங்களின் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். காற்றில் கலந்திருக்கும் நச்சுத்துகள்களால் மூச்சுத்திணறல், இருமல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்வாய்ப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்குளாகி வரும் நிலையில், அது தொடர்பாகத் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அளித்த புகாரோ  கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அப்பகுதி மக்களே நச்சுத்துகள்களை சேகரித்து நடத்திய பகுப்பாய்வில் பல அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் சாலைகளில் காணப்படும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களில், புளோரைடு, காட்மியம் மற்றும் யுரேனியம் ஆகியவை இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற நச்சுக்களால் இரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதே கோத்தாரி உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டு வராத அப்பகுதி மக்கள், தற்போது காற்றில் பரவும் நச்சுத்துகள்களால் நாள்தோறும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் வருடம் தவறாமல் ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தமிழக அரசு ஒருபுறம் கூறிவரும் நிலையில், மற்றொருபுறம் தொழிற்சாலைகளால் மக்கள் படும் பாதிப்பு எல்லையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் தவிக்கும் வடசென்னை மக்களுக்கு வளர்ச்சித் திட்டம் என்பது பெயரளவிலேயே இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

Tags: எண்ணூர் கோத்தாரி உரத் தொழிற்சாலைஉலோகம் கலந்த நச்சுத் துகள்வடசென்னைIs North Chennai unlivable?
ShareTweetSendShare
Previous Post

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

Next Post

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Related News

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் பீகாரில் செயல்படுகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies