3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி என்பது வெறும் ஊழல் அல்ல, இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாக, கோபாலபுரம் குடும்பத்தினர், தங்கள் ஊழலை வெளிப்படுத்தியதற்காக சாதாரண மக்களுக்கு சட்ட அறிவிப்புகளை அனுப்புவார்கள் என்றும், இந்த முறை, கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் நிறுவனத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தி, உறவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், குடும்பத்தின் பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் 3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும்,
கடந்த 20 ஆண்டுகளில் பணமோசடி மூலம் 6 ஆயிரத்து 381 கோடி அளவுக்கு ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாகவும் எம்பி தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது வெறும் ஊழல் அல்ல; இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு என தெரிவித்துள்ள அண்ணாமலை, மக்கள் பதில் அளிக்க வேண்டும், சட்டம் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.